13 வயது பாடசாலை மாணவி கடத்தல்..
அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் பதின்மூன்று வயது சிறுமி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது, சிறுமியை காணவில்லை என்று அவரை தேடிய நிலையில் அவரை குறித்த இளைஞர் கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

கருத்துரையிடுக