புதிதாக அமைக்கப்பட்டு மூன்றே மாதங்களில் சேதமடையும் மதகுகள்.........எமது
பிரதான கால்வாயில் புதிதாக அமைக்கப்பட்டு நான்கே மாதங்களான மதகு சேதமடையும் அவலம்... 18/5 பிரதான கால்வாயில் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்கவென மதகுகள், தடுப்பணைகள் அமைப்பது வழமை.. எனினும் பல மில்லியன்ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு நிலைக்கவேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கங்களாகும்.. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக காணப்பட்ட மதகுகள் தமது கால எல்லையை தாண்டியதால் உடைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு 2016/04 ம் மாதமளவில் பாவனைக்கு விடப்பட்ட மதகுகள் மூன்றே மாதங்களில் சேதமடையும் அவலம் காணப்படுகின்றது... விவசாய நீர் வினியோகத்துக்குப் மண்ணரிப்பை தடுக்கவும் பயனுள்ளதாக காணப்படும் மதகுகள் உரியமுறையில் அமைக்கப்பட வேண்டுமேன பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்...
(SGS)





கருத்துரையிடுக