GuidePedia

0
வன்முறைக் கொள்கையை மட்டுமே எதிர்த்தேன், விடுதலைப் புலிகளையல்ல: வீ. ஆனந்தசங்கரி

கண்டி சென்றுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வீ. ஆனந்தசங்கரி, நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையுடனும் சம உரிமையுடனும் வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற சமயப் பெரியார்களிடமிருந்து ஆசிர்வாதம் பெறுவது பொருத்தமானது என தான் நினைப்பதாகக் குறிப்பிட்டார்.
தான் ஒரு அகிம்சாவாதி என சுட்டிக்காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர், விடுதலைப் புலிகளின் வன்முறைக் கொள்கையை மாத்திரமே எதிர்த்ததாகவும் அவர்களை எதிர்த்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top