GuidePedia

0


ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 18 பேர் பலியானதுடன் சுமார் 43 பேர் வரை படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


பக்தாத் நகருக்கு ஒதுக்குப் புறமாகவுள்ள பின்தங்கிய பகுதியிலேயே இக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது ஐ.எஸ்.போராளிகளின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top