மத்தியமுகாம் -05 கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிருவாகம் தெரிவு..
(த.சுதன்)
மத்தியமாகாம்-05 கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் 2016.09.02 அன்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் தலைவர் திரு அமிர்தலிங்கம் தலைமையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம நிலதாரி, பொருளாதார உத்தியோகத்தர்கள் முன்னிலையில் காலை 9:00 மணிக்கு நடைபெற்றது.இப் பொதுக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக புதிய நிருவாகத்தெரிவு இடம்பெற்றது இதில் பலர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக த. சுதன் அவர்களும் செயலாளராக திரு சிவநேசராசா அவர்களும் பொருளாளராக திரு சிவானந்தராசா அவர்களும் மற்றும் உபதலைவராக தெ.பிரபாகரன் அவர்களும் உட்பட 8 நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் புதிய தலைவர் உரையாற்றுகையில் தமது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சிறப்பாக செயற்படுவது சம்பந்தமாக பேசியிருந்தார்..
புதிய நிருவாகசபையினருக்கு எது கழகத்தின் நல்வாழ்த்துக்கள் உம்மால் எமது கிராமம் அபிவிருத்தி அடையட்டும்..




கருத்துரையிடுக