GuidePedia

0
பாணந்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நீர்வெட்டு
பாணந்துறை உள்ளிட்ட பிரதேசங்கள் சிலவற்றில் இன்று (24) காலை 8 மணியிலிருந்து பத்து மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
களுகங்கை நீர்ப்பாசனத் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் பிரகாரம் பாணந்துறை, கிரண வீதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இன்று (24) நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 8 மணிமுதல் ரைகம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top