GuidePedia

0
ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கையில் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடை பெற்ற இலங்கை அணிக்கு எதிரான 4 ஆவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர் . பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை பெற்றது .
லஹிரு திரிமான்ன 90 ஓட்டங்களை பெற்றார்.
257 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 40.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கனை அடைந்து .
அஹமட் செஷாட் 95 ஓட்டங்களை பெற்றார்.
பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 இற்கு 1 என்ற ரீதியில் தொடரில் முன்னிலையில் உள்ளது .
இதனடிப்படையில் பாகிஸ்தான் அணி 9 வருடங்களின் பின்னர் இலங்கையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top