GuidePedia

0



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. யாழ்ப்பாணம் உடுவிலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலேயே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு, வடக்கின் இராணுவப் பிரசன்னம், ஜெனீவா அறிக்கை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டி ருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவி த்தன.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச இறங்குதளமாக தரமுயர்த்து வது உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங் கள் குறித்தும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப் பதாகத் தெரியவருகிறது.

-Thinakaran-



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top