GuidePedia

0
எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் – ஹர்ஷ டி சில்வா

ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என கொள்கை திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு இயலும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் குறிப்பிடுகின்றார்.
ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து நியூஸ்பெஸ்ட் வினவியதற்கு பதிலளித்தபோதே பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயங்களைக் கூறினார்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் எரிபொருட்களின் விலை 30 வீதத்தால் குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top