GuidePedia

0



ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்கு 566,823 பேர் தகுதி பெற்­றுள்­ளனர். நடை­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலில் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­காக 628,925 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்த நிலையில் 566,823 பேர் தகுதிபெற் றுள்ளனரென பிரதி தேர்­தல்கள் ஆணை­யாளர் எம்.எம்.மொஹமட் தெரி­வித்தார்.

அந்­த­வ­கையில் அதில் 62,102 பேரின் விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­கான வாக்­குச்­சீட்­டுக்கள் மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­ல­கங்­க­ளி­லி­ருந்து தபால் நிலை­யங்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளன.

அனைத்து தெரி­வத்­தாட்சி அலு­வ­ல­கங்­க­ளிலும் தற்­கா­லிக தபால் நிலை­யங்­களை அமைப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் மேற்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் மொஹ மட் தெரி­வித்தார்.
இம் முறை இரண்டு கட்­டங்­க­ளாக தபால் மூல வாக்­குப்­ப­தி­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன. ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி பொலிஸ் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளுக்கும், அரச பாட­சா­லை­களின் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் தபால் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இது­த­விர ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06ஆம் திக­தி­களில் தகுதி பெற்­றுள்ள மற்­றைய வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் சார்­பாக 6151 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாடு முழு­வதும் மொத்­த­மாக ஒரு கோடியே 50 இலட்­சத்து 44490 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர்.

அத்­துடன் நாடு முழு­வதும் 12021 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் தேர்­த­லா­னது 2014 ஆம் ஆண்டு வாக்­காளர் இடாப்பின் பிர­காரம் நடை­பெ­ற­வுள்­ளது. தேர்­தலில் மாவட்­டங்­களின் ரீதியில் 196 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­ யப்­ப­ட­வுள்­ள­துடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக் குகளின் அடிப்படையில் தேசியபட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட வுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வுள்ளனர்.

-vk-



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top