GuidePedia

0
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில்  471 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 471 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகளின் அடிப்படையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச நியமனம் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் 139 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத பாதாதைகளை காட்சி படுத்தியமை மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியமை குறித்து 91 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் 68 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அரச சொத்துக்களைப் பயன்படுத்தியமை குறித்து 62 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top